புதுக்கோட்டை நகரின் மத்தியில் கிழக்கே இவ்வாலயம் அமைந்துள்ளது.
இறைவி: புவனேஸ்வரி , அஷ்ட தச புஜ மகாலட்சுமி
தற்போதைய பெயர் : நவஸாலபுரி என்ற புதுக்கோட்டை
சரஸ்வதி ஞான ரூபம், மகா லட்சுமி கிரியா ரூபம், மகா காளி இச்சா ரூபம். இம்மூன்று பேரும் சேர்ந்து சச்சிதானந்த ரூபிணியாக ,சாமுண்டேஸ்வரி ,புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறார்கள். புதுக்கோட்டையில் உள்ள இக்கோவிலை அதிஷ்டானம் என்றே அழைக்கிறார்கள். முன்னர் இருந்த ஜட்ஜ் சுவாமிகளும் பின்னர் சாந்தாநந்த சுவாமிகளும் புவனேஸ்வரி விக்கரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். புவனேஸ்வரி பஞ்சரத்ன ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவர் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment